Connect with us

Raj News Tamil

மும்மதங்களின் முறைப்படி அரங்கேறிய திருமணம் ! அமொிக்கரை கரம் பிடித்த தமிழக பெண் மருத்துவா்!

உலகம்

மும்மதங்களின் முறைப்படி அரங்கேறிய திருமணம் ! அமொிக்கரை கரம் பிடித்த தமிழக பெண் மருத்துவா்!

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் நசீரா தாவூத், தனது சொந்த ஊாில் பள்ளி படிப்பை முடித்தவுடன் பெங்களூருவில் மருத்துவம் பயின்று இவா் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு மருத்துவ படிப்பை முடித்து அமெரிக்காவில் மருத்துவராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் இருந்து வருகிறார்.

இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்ற இவர் அங்கு பொறியாளராக பணியாற்றி வந்த பில் என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார். இந்நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக கடந்த ஆண்டு ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். இதையடுத்து, திருமணத்தை தனது சொந்த ஊருக்கு அருகே உள்ள கொடைக்கானலில் நடத்த திட்டமிட்ட நசீரா, நேற்று கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தனது காதலர் பில்லை நண்பா்கள் , பெற்றோா்கள் புடைசூழ திருமணம் செய்துகொண்டார்.

இதில் சுவராசியமாக நசீரா மற்றும் பில் ஆகிய இருவரும் மதம், இனம், மொழி கடந்து காதலித்த நிலையில் அவர்களுடைய திருமணம், அதிகாலையில் கிறிஸ்துவ முறைப்படியும், பகலில் இந்து முறைப்படியும், மாலையில் இஸ்லாமிய முறைப்படியும் நடைபெற்றது. மும்மதத்தை பறைசாற்றி, பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இத்திருமணத்திற்கு அனைவரும் தங்களின் பாராட்டுகளையும் ,
கருத்துகளையும் தொிவித்துவருகின்றனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top