தமிழகம்
ரயிலில் சிக்கி உயிரை விட்ட போலீஸின் மனைவி..!கொலையா ? தற்கொலையா ?
வேலூர் மாவட்ட காவல் துறையில் காவலராக பணியாற்றி வருபவர் ராஜசேகர் (34), இவரது மனைவி பவித்ரா (32). மாற்று சமூகத்தை சேர்ந்த இவர்களுக்கு 2015 ல் திருமணம் நடந்து இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை பவித்ரா வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலில் சிக்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவாின் இறப்பு குறித்து விசாரணை செய்த போலீஸாா், குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறை தரப்பின் முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னா் , இது குறித்து வழக்கு பதிவு செய்தகண்டோன்மெண்ட் ரயில்வே காவல் துறையினர், உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை
மேற்கொண்டு வருகின்றனா்.