தமிழகம்
கணவனை கொலை செய்து நான்கு வருடங்களாக தலைமறைவாக இருந்த மனைவி கைது!
சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார், மேகனா தம்பதி.
கடந்த 2020 ஆம் ஆண்டு செந்தில் குமார் காணாமல் போக்கியுள்ளார். இது குறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி செந்தில் குமாரை தேடி வந்தனர்.
இதில் மேகனா அவரது ஆண் நண்பருடன் சேர்ந்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கணவனை கொன்று புதைத்தது போலீசாருக்கு தெரிய வந்தது. இதை அடுத்து வழக்கு பதிவு செய்து கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மேனகாவை மணிமங்கலம் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
ஏற்கனவே கொலைக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலன் ராஜேஷ் கண்ணா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.