Connect with us

Raj News Tamil

விஷப்பாம்பை ஏவி மனைவி, குழந்தையை கொன்ற கொடூர கணவன்!

இந்தியா

விஷப்பாம்பை ஏவி மனைவி, குழந்தையை கொன்ற கொடூர கணவன்!

ஒடிசா மாநிலத்தில் ஆதிகான் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பத்ரா (25), இவரது மனைவி பசந்தி (23) என்பவருக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு டெபாஸ்மிதா (வயது 2) என்ற பெண் குழந்தை இருந்துள்ளது.

இந்நிலையில், கணேஷ் பத்ரா ஒரு பாம்பாட்டியை சந்தித்து, பூஜை செய்வதற்காக பாம்பு வேண்டும் என்று கூறி, கடுமையாக விஷம் கொண்ட நாகப்பாம்பை வாங்கியுள்ளார்.

இதையடுத்து அவர் நாகப்பாம்பை மனைவியும், மகளும் படுத்திருந்த அறைக்குள் விட்டுள்ளார். இவர் மற்றொரு அறையில் தூங்கியுள்ளார். மறுநாள் காலை மனைவி மற்றும் மகள் இருவரும் பாம்பு கடித்து இறந்து கிடந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முதலில் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்கை பதிவு செய்தனர். பின்னர் பசந்தி தந்தை இவருரின் மரணத்தில் கணேஷ் பத்ராவுக்கு தொடர்பு இருக்கும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

விசாரணையின்போது, அவர் முதலில் குற்றத்தை மறுத்தார். பாம்பு தானே அறைக்குள் நுழைந்திருக்கலாம் என்றும் கூறினார். பின்னர் கிடுக்கிப்பிடி விசாரணையில், குற்றத்தை போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.

More in இந்தியா

To Top