தமிழகம்
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
பொங்கல் பண்டிகை முன்னிட்டு மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ்பெற்றவை. அதன்படி, ஜனவரி 15ம் தேதி அவனியாபுரத்திலும், 16ம் தேதி பாலமேட்டிலும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்று வருகிறது.
இதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெரும் வீரர்களுக்கும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது.
மேலும் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதலமைச்சர் சார்பில் காரும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு அமைச்சர் உதயநிதியின் சார்பில் காரும் பரிசாக வழங்கப்படுகிறது.