Connect with us

Raj News Tamil

உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது!

தமிழகம்

உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது!

உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி மாடுபிடி வீரர்களின் உறுதி மொழி ஏற்புடன் இன்று காலை தொடங்கியது.

ஜல்லிக்கட்டு போட்டியை ஆட்சியர் சங்கீதா மற்றும் அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இப்போட்டியில் பங்கேற்க 1,000 காளைகள், 700 மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது.

முதல் பரிசு பெறும் மாட்டின் உரிமையாளருக்கு, அதிக காளைகளைப் பிடித்து முதலிடம் பெறும் மாடு பிடி வீரருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.

More in தமிழகம்

To Top