Connect with us

Raj News Tamil

நாயை காப்பாற்ற சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி..!

இந்தியா

நாயை காப்பாற்ற சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி..!

மத்திய பிரதேசம் போபாலில், சரள் நிகாம்(23) என்ற இளைஞர் தனது பெண் தோழிகளுடன், அதே பகுதியில் இருக்கும் கெர்வா அணைக்குச் சென்றுள்ளார். அப்போது, பெண் தோழி ஒருவரின் வளர்ப்பு நாய் அணைக்குள் விழுந்துவிட்டது.

இதையடுத்து, ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு நாயை காப்பாற்ற முயற்சிக்கும் போது, சரளின் கைப்பிடி நழுவியதால் அவர் அணைக்குள் விழுந்து நீரில் மூழ்கியுள்ளார். இதற்கிடையே அணையில் விழுந்த நாயானது நீந்தி மேல வந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கரையொதிங்கிய சரளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே மகனான சரளின் இறப்பு செய்தியை கேட்ட பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

More in இந்தியா

To Top