Connect with us

Raj News Tamil

புத்தாண்டு கொண்டாட்டம் : எந்த அசம்பாவிதமும் இல்லை.. சென்னை காவல்துறை தகவல்

தமிழகம்

புத்தாண்டு கொண்டாட்டம் : எந்த அசம்பாவிதமும் இல்லை.. சென்னை காவல்துறை தகவல்

சென்னையில் புத்தாண்டை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாட 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சென்னையில் 2024 புத்தாண்டு இரவு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டதாக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று (31.12.2023) சென்னை பெருநகரில் சிறப்பாக பணிகள் மேற்கொண்ட, காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினரை பாராட்டி, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்கு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி இருந்தனர். உயிரிழப்பு இல்லா புத்தாண்டு கொண்டாட்டத்தை உறுதி செய்வதற்காக, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top