தமிழகம்
திருவொற்றியூரில் திகீா்..! நண்பனை தாக்கியவரை கத்தியால் பதம் பாா்த்த கும்பல்..!
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மேயர் பாசுதேவ் தெருவில் வசித்து வருபவர் சோபன்(27)இவர் திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகரில் தனது நண்பரோடு புறாவை விற்பனை செய்யும் தொழிலை கடந்த ஒருமாத காலமாக செய்து வருகிறாா்.
இந்நிலையில், புறாவை பார்க்க சோபன்
என்கிறவா் இருசக்கர வாகனத்தில் இப்பகுதிக்கு வந்துள்ளார்.
கே.சி.பி சாலையில் அவா் வந்து கொண்டிருக்கும் பொழுது அங்கு தன்னுடன் ஏற்கனவே முன் விரோத பிரச்சனையில் தொடர்புடைய பிரசாத் என்பவரை பார்த்துள்ளார்.
இருவரும் முறைத்து கொண்டு ஒருவருக்கொருவர் வாக்குவாதமிட்டு சண்டையிடவே ஒருகட்டத்தில் சோபன் பிரசாத் அருந்தி கொண்டிருந்த பீர் பாட்டிலை பிடிங்கி தாக்கியுள்ளார்.ரத்த சொட்ட சொட்ட வந்த பிரசாத் வழியில் அவரது நண்பர்களான
ஜோதிபாசு சுரேஷ் நிர்மல் குமார் ஆகியோர் பார்க்கவே நடந்ததை பிரசாத்
கூறிவிட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
நண்பன் தாக்குதலுக்கு ஆளானதில் ஆத்திரமடைந்த மூவரும் கத்தியோடு சோபனை தேடி வந்த நிலையில் மாட்டுமந்தை மேம்பாலம் அருகே இரூ சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த சோபனை கண்டதும் மூவரும் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஜோதி பாசு தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சோபனின் வயிற்று பகுதி கழுத்தை தொண்டை என நான்கு இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சோபன் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்;
தகவலறிந்து வந்த .திருவொற்றியூர் போலீசார்
சம்பவ இடத்திற்கு வந்து சோபனின் உடலை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை செய்து விட்டு தப்பியோடிய மூவரையும் கைது செய்து காவல் நிலையத்தில் விசாரணை செய்து வருகின்றனர்