தமிழகம்
“என் பொண்டாட்டி கூட பேசாத.. அப்படி தான் பேசுவேன்” – நண்பனின் ஆணுறுப்பை வெட்டிய நபர்!
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள படையப்பா நகரை சேர்ந்தவர் மணி. மாற்றுத்திறனாளியான இவர், பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சில உதவிகளை செய்து, அருண்பாண்டியன் என்பவர் நட்பாக பழகி வந்துள்ளார்.
இதையடுத்து, வீட்டிற்குள் நுழைந்த அருண்பாண்டின், மணியின் மனைவியிடமும் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை அறிந்த மணி, தன்னுடைய மனைவியை கண்டித்துள்ளார்.
சில மாதங்கள் இருவரும் சந்திக்காமல் இருந்த நிலையில், சமீபத்தில் மீண்டும் தனது அட்டகாசங்களை அருண்பாண்டியன் ஆரம்பித்துள்ளாார். இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த மணி, தன்னுடைய இன்னொரு நண்பனான ஹரி கிருஷ்ணனிடம் புலம்பியுள்ளார்.
இதையடுத்து, மணியும், ஹரி கிருஷ்ணனும் சேர்ந்து, அருண்பாண்டியனை சந்தித்து, எச்சரித்துள்ளனர். அப்போது மது போதையில் இருந்த அவர், இருவரிடம் நக்கலாக பேசியுள்ளார். இதனால் கோபம் அடைந்த இருவரும், அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அருண்பாண்டியனின் ஆணுறுப்பை மணி வெட்டியுள்ளார்.
ரத்தம் பீறிட்டு வெளியேறியதை கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள், அருண்பாண்டியனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே, இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மணியையும், ஹரி கிருஷ்ணனையும் கைது செய்துள்ளனர்.
You must be logged in to post a comment Login