Connect with us

Raj News Tamil

இது ஆரம்பம்தான்; இன்னும் சில திமுக அமைச்சர்கள் சிறை செல்வார்கள்: அண்ணாமலை!

தமிழகம்

இது ஆரம்பம்தான்; இன்னும் சில திமுக அமைச்சர்கள் சிறை செல்வார்கள்: அண்ணாமலை!

இன்னும் நான்கைந்து திமுக அமைச்சர்கள் சிறை செல்வார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பொன்முடி மற்றும் அவரது மனைவி சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் பதவியையும், எம்எல்ஏ பதவியையும் இழந்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை தெரிவித்தாவது:

“பாஜக இத்தீர்ப்பை வரவேற்கிறது. தாமதமாக இருந்தாலும்கூட நல்ல தீர்ப்பு வந்துள்ளது. நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊழல் இல்லாத சமுதாயம் அமைய இது ஒரு படிக்கல்லாக அமையும் என்று நம்புகிறோம். இது ஆரம்பம்தான். 2024ம் ஆண்டு மத்தியில் இன்னும் நான்கைந்து திமுக அமைச்சர்கள் சிறை செல்வார்கள். இன்றைய தீர்ப்பு பணத்தை வைத்து அரசியல் செய்யும் திமுகவுக்கு அனைத்தையும் புரட்டிப்போடும் தீர்ப்பு. நீதித்துறையின் செயல்பாட்டையும் ஆளுங்கட்சியையும் தொடர்புபடுத்தி பார்க்கக்கூடாது. பாஜகவில் இணைவார்கள் விமோசனம் பெறுவார்கள் என்பது எங்கள் மீதான பொய் குற்றச்சாட்டு” என்று தெரிவித்துள்ளார்.

More in தமிழகம்

To Top