இது POLICE STATION- அ ?அழையா விருந்தாளியாக பாம்பு , பூரான் !

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் மிக்ஜான் புயலின் காரணமாக கொட்டி தீர்த்த கனமழையால் பூவிந்தவல்லி காவல் நிலையம் வெள்ள காடாக மாறியுள்ளது. காவல் நிலையம் அமைந்துள்ள கட்டிடம் மிகவும் பழமையான கட்டிடம் என்பதால் பெய்த கனமழையை தாங்க முடியாமல் உதிர்ந்து கொட்டுவதாக தொிகிறது.

மேலும், காவல்நிலையத்தின் பல பகுதிகள் மேற்கூரைகள் இடிந்து விழுவதால் மிகுந்த அச்சத்துடனே காவலர்கள் பணி செய்யும் சூழல் உருவாகியுள்ளது,காவல்நிலையத்தின் அனைத்து அறைகளிலும் மழை நீர் புகுந்து உள்ளதால் காவல் நிலைய கோப்புகள் நீரில் மூழ்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.காவல்நிலையத்தை சுற்றி முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி இருப்பதால் பாம்பு,தேள்,போன்ற விஷ ஜந்துக்கள் அழையா விருந்தாளியாக வருகை தருவதாக காவலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடனடியாக தேங்கி இருக்கும் மழை வெள்ளத்தை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், இடிந்து விழும் சூழலில் உள்ள கட்டிடத்தை புதுப்பித்து தர வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News