Connect with us

Raj News Tamil

இந்த முறை சென்னையிலா ? மீண்டும் தடம் புரண்ட ரெயில் !

தமிழகம்

இந்த முறை சென்னையிலா ? மீண்டும் தடம் புரண்ட ரெயில் !

இந்தியாவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் , ரெயில் தீ பற்றிக்கொள்வது , தடம் புரல்வது என பல்வேறு செய்திகள் வெளிவந்து , அனைவரையும் அதிா்ச்சிகுள்ளாக்கி வருகிறது.அதன்படி, இன்று சென்னையில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே பணிமனைக்கு சென்ற ரெயில் இன்று தடம் புரண்டது.ரெ யில் பெட்டியின் நான்கு சக்கரங்களும் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது, பணிமனைக்கு சென்ற ரெயில் என்பதாலும் பயணிகள் யாரும் இல்லாததாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து, தண்டவாளத்தில் இருந்து கீழிறங்கிய ரெயில் பெட்டியை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரெயில் விபத்து குறித்து ரெயில்வே அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top