Connect with us

Raj News Tamil

காய்கறி வியாபாரியிடம் அன்பை கொட்டிய கோமாதா! வீடியோ வைரல்!

இந்தியா

காய்கறி வியாபாரியிடம் அன்பை கொட்டிய கோமாதா! வீடியோ வைரல்!

இணையத்தில் உள்ள பல்வேறு வீடியோக்கள், மனிதனுக்கும், விலங்குகளுக்கும் இடையிலான பிணைப்பை காட்டும் விதமாக உள்ளன. அவை பார்ப்பதற்கு ரசிக்கத்தக்க வகையில் இருக்கும்.

மனிதனுக்கும், நாய்கள் அல்லது பூனைகளுக்கும் இடையிலான பிணைப்பு தான், பெரும்பாலான வீடியோக்களில் இடம்பெறும். மிகவும் அரிதாக தான், மனிதனுக்கும் – பசுமாடுகளுக்கும் இடையிலான பிணைப்பை காட்டும் வீடியோக்கள் வைரலாகும்.

அதாவது, அந்த வீடியோவில், ஒருவர் காய்கறி வியாபாரி, சாலையோரமாக காய்கறிகளை விற்பனை செய்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பசுமாடு, அங்கிருந்த காய்கறிகளையும் சாப்பிடாமல், காய்கறி வியாபாரியிடம் தனது அன்பை வெளிப்படுத்தியது.

அதாவது, நாயும், பூனையும் தனது அன்பை வெளிப்படுத்துவது போல், தனது முகத்தை, வியாபாரியின் முகத்துடன் அந்த பசுமாடு உரசியது. அதன்பிறகு, அந்த வியாபாரி தன்னிடம் இருந்த காய்கறிகள் சிலவற்றை, பசுவுக்கு வழங்கினார். இதையடுத்து, அந்த பசுவும் அதனை மகிழ்ச்சியுடன் சாப்பிட்டது.

“சில பேர் தங்களது மனதளவில் மிகவும் உயர்ந்தவர்களாக இருப்பார்கள். அந்த கோமாதாவை பாருங்கள். அந்த காய்கறி வியாபாரி காய்கறிகளை சாப்பிட கொடுக்கும்வரை, அங்கிருந்த எந்தவொரு பொருளையும் அது சாப்பிடவில்லை” என்று அந்த வீடியோவுக்கு கேப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

More in இந்தியா

To Top