தமிழகம்
நீதிமன்ற வளாகத்திலேயே போலீசுக்கு கொலை மிரட்டல்..பாஜக பிரமுகர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் வினோத்குமார்(38). இவர், பாஜக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அடிதடி வழக்கில் ஆலங்காயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜராக வினோத் குமார் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அதே நேரத்தில் காவல் உதவி ஆய்வாளர் ஜெகநாதனும் நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது வினோத்குமார் ஜெகநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பாஜக பிரமுகர் வினோத்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.