Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

“வீட்டு மனை பட்டா கிடையாது” – பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு!

தமிழகம்

“வீட்டு மனை பட்டா கிடையாது” – பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு!

நிரூபர்கள், பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம், நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள், இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை மாவட்டம் சூர்யா நகரில் உள்ள 86 பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால், அதில் 36 பேர்களுக்கு ஏற்கனவே நிலம், வீடு உள்ளது என்று கூறி, அவர்களது பட்டாக்கள் மட்டும், மாவட்ட ஆட்சியரால் ரத்து செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கை, பத்திரிகையாளர்கள் மத்தியில், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு, பல்வேறு பத்திரிகையாளர்கள் நல அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top