Connect with us

Raj News Tamil

டிஎன்எஸ்டிசி பேருந்துகளும் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்படும்!

தமிழகம்

டிஎன்எஸ்டிசி பேருந்துகளும் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்படும்!

சமீபத்தில் போக்குவரத்து துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையில் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டிஎன்எஸ்டிசி பேருந்துகளும் இனி கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட தகவலின் படி, தென் மாவட்டங்களுக்கு செல்லும் டிஎன்எஸ்டிசி பேருந்துகளும் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்படும். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 710 டிஎன்எஸ்டிசி பேருந்துகள் செல்லும்.

மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து 160 டிஎன்எஸ்டிசி பேருந்துகள் இயக்கப்படும். ஏற்கனவே விரைவுப்பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும்.

தென் மாவட்டங்களுக்கு செல்லும் 20% பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். ஈசிஆர், பூந்தமல்லி வழியாக செல்லும் டிஎன்எஸ்டிசி பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும். விழுப்புரம் கோட்டத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் தாம்பரம் வரை இயக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top