அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது. திருச்சி காந்தி சந்தையை பொறுத்தவரை கடந்த வாரம் கிலோ ஒன்றுக்கு 20 ரூபாய் 30 ரூபாய் என விற்பனை செய்யபட்டது.
சமீப நாட்களில் மழை காரணமாக வரத்து குறைந்து போனதால் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
திருச்சி காந்தி சந்தையில் 25 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி 1320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ 80 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.