தமிழகம்
20 ரூபாய்க்கு தக்காளி விற்பனை..கடை முன்பு குவிந்த மக்கள்…எங்கு தெரியுமா??
தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து அரசு தானாக முன்வந்து ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு தற்போது விற்பனை நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் முதுநகர் சாலக்கரை பகுதியில் ராஜேஷ் என்கின்ற வியாபாரி ஒரு கிலோ தக்காளியை 20 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார். இதனை அறிந்த மக்கள் கடையில் குவிந்தனர்.
ஒரு நபருக்கு ஒரு கிலோ என்ற அடிப்படையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 600 கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும் வியாபாரிகள் பொதுநலத்துடன் இதுபோன்று விலை ஏற்றத்தின் போது விலையை குறைத்து கொடுத்து உதவ வேண்டும் என கூறியுள்ளார்.