சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்; குற்றால அருவிகளில் குளிக்க தடை!

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக செங்கோட்டை, குற்றாலம், மேலகரம், சிந்தாமணி, மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது.

இதே போல மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கன மழை பெய்தால் குற்றால அருவிகளுக்கு வரும் தண்ணீரின் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அருவியில் குளிப்பதற்கு போலீசார் தற்காலிக தடை விதித்தனார். இதனால் இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருவதினால் குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News