தமிழகம்
வெள்ளத்தால் மூழ்கிய தரைப்பாலம் : நெல்லை அருகே போக்குவரத்து துண்டிப்பு
திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த மழையால் பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளன. இதனால் பெருக்கெடுத்த தண்ணீர் மேலஇலந்த குளம் பகுதியில் தரைப் பாலத்தை மூழ்கடித்தவாறு பாய்ந்தது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியிலிருந்து திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் செல்லும் நெடுஞ்சாலையில் மேல இலந்த குளம் தரைப் பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தை மூழ்கடித்தவாறு வெள்ளம் பாய்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்துக்கு மத்தியில் ஆபத்தான முறையில் தரைப் பாலத்தை கடந்து சென்றன.
8 ஆண்டுகளுக்குப்பின் ஏற்பட்டுள்ள இந்த வெள்ளப் பெருக்கால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். மேலும் தரைப்பாலம் அமைந்துள்ள இடத்தில் மேம்பாலம் அமைத்துத்தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.