தமிழகம்
திருச்செந்தூரில் தொடரும் விபரீதம்..! வெள்ளத்தால்உயிரிழந்த 40 ஆடுகள்..!
தமிழகத்தின்,தென் பகுதியில் தொடரும் கனமழையின் காரணமாக திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்து தோப்பூர், கரம்பவிளை, கீழநாலுமூலைக்கிணறு, காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீரில் மூழ்கி 40க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தது.
இதில் கரம்பைவிளையை சேர்ந்த கோபால் வளர்த்த 20 ஆடுகள் இறந்து மழைநீரில் மிதந்தது. இந்த காட்சி தற்போது வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.