தமிழகம்
கல்லூரி முடிந்து காரில் சென்ற மாணவா்களுக்கு ஏற்பட்ட கொடூரம்..!
திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமிய கல்லூரியில்படித்து முடித்துவிட்டு கல்லூரி மாணவா்கள் 6 போ் ஆம்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தனா்.அப்போது எதிா்பாராத விதமாக செங்கிலிக்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பம் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்ததாக தெரிகிறது. இதில் பயணித்த நவ்மான் , நியமத்துல்லா, கிஷோர், முஜம்மில், வாசிப், புர்கான் ஆகியோா்கள் பலத்த காயமடைந்தனா்.
இச்சம்பவத்தின்போது , அருகிலிருந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனா், தகவலறிந்து விரைந்து வந்த ஆம்பூர் போலீசாா் அவா்களை மீட்டு வாணியம்பாடி அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.இதில் அதிர்ஷடவசமாக உயிர் தப்பிய மாணவா்களில்,நவ்மன் என்பவா் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் , மேல் சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா்.இச்சம்பம் குறித்து போலீசாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.கல்லூரி சென்ற மாணவா்களுக்குஇப்படிநோ்ந்துள்ளது அப்பகுதியிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.