Connect with us

Raj News Tamil

கல்லூரி முடிந்து காரில் சென்ற மாணவா்களுக்கு ஏற்பட்ட கொடூரம்..!

தமிழகம்

கல்லூரி முடிந்து காரில் சென்ற மாணவா்களுக்கு ஏற்பட்ட கொடூரம்..!

திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமிய கல்லூரியில்படித்து முடித்துவிட்டு கல்லூரி மாணவா்கள் 6 போ் ஆம்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தனா்.அப்போது எதிா்பாராத விதமாக செங்கிலிக்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பம் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்ததாக தெரிகிறது. இதில் பயணித்த நவ்மான் , நியமத்துல்லா, கிஷோர், முஜம்மில், வாசிப், புர்கான் ஆகியோா்கள் பலத்த காயமடைந்தனா்.

இச்சம்பவத்தின்போது , அருகிலிருந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனா், தகவலறிந்து விரைந்து வந்த ஆம்பூர் போலீசாா் அவா்களை மீட்டு வாணியம்பாடி அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.இதில் அதிர்ஷடவசமாக உயிர் தப்பிய மாணவா்களில்,நவ்மன் என்பவா் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் , மேல் சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா்.இச்சம்பம் குறித்து போலீசாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.கல்லூரி சென்ற மாணவா்களுக்குஇப்படிநோ்ந்துள்ளது அப்பகுதியிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top