தமிழகம்
டீ குடித்துக் கொண்டிருந்த ஆண்.. நைசாக தனியாக அழைத்து சென்ற திருநங்கைகள்.. நடத்திய கொடூரம்..
சென்னை ஆழ்வார் திருநகரை சேர்ந்த குருசாமி என்பவர், ராமாபுரத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 25-ஆம் தேதி அன்று, சினிமாவிற்கு சென்றுள்ளார்.
இரவுக் காட்சி முடிந்த பிறகு, அதிகாலை 2.30 மணிக்கு வெளியே வந்த குருசாமி, அருகில் இருந்த கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2 திருநங்கைகள், அவரிடம் நைசாக பேசி, தனியாக அழைத்து சென்றுள்ளனர்.
பிறகு, குருசாமியை மிரட்டிய திருநங்கைகள், அவரது வங்கிக் கணக்கில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை, ஜி – பே மூலம் பறித்து சென்றனர்.
இதையடுத்து, அங்கிருந்து தப்பிச் சென்ற ஐடி ஊழியர், எம்.ஜி.ஆர் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன், விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login