Connect with us

Raj News Tamil

போக்குவரத்து தொழிற்சங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!

தமிழகம்

போக்குவரத்து தொழிற்சங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!

போக்குவரத்து தொழிலாளர்கள் பொங்கல் நேரத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் அரசு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க கோருவது, ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு அகவிலைப்படி நிலுவை வழங்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்யப்போவதாக தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேற்படி கோரிக்கைகள் தொடர்பாக வரும் 27.12.2023 அன்று பிற்பகல் 04.00 மணியளவில் சென்னை-6, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ் வளாகம் தொழிலாளர் நல வாரிய கட்டிடத்திலுள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் (மூன்றாம் தளம்) தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்னிலையில் நடைபெறவுள்ள பேச்சு வார்த்தைக்கு தொழிற்தாவாவில் சம்மந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் நிர்வாகங்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், வேலைநிறுத்தம் போன்ற நேரடி நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்றும், பொது அமைதி காத்திடுமாறும் சமரசபேச்சுவார்த்தையின் சுமுக முடிவினை எதிர்நோக்குமாறும் இருதரப்பினருக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top