Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

பாஜகவில் இருந்து விலகினார் திருச்சி சூர்யா..!

அரசியல்

பாஜகவில் இருந்து விலகினார் திருச்சி சூர்யா..!

தமிழக பாஜகவின் ஓபிசி அணி தலைவராக இருந்தவர் திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா. கட்சியில் இணைந்தது முதலே சிறப்பாக செயல்பட்டுவந்த இவர், மாநிலத்தலைவர் அண்ணாமலையின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றார். பின்னர் கட்சியில் பதவி வழங்குவது தொடர்பாக சிறுபான்மை அணி தலைவர் டெய்சி சரணை அச்சில் இடப்படாத அபாச வார்த்தைகளால் பேசிய வழக்கில் 6-மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கிடையில் பாஜகவில் இருந்து விலகுவதாக ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் . வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும் .

அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் அவர்கள் மாற்றப்பட வேண்டும் . இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் . உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி அண்ணாமலை என்று பதிவிட்டுள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top