“நான் படிக்கணும்.. லவ் வேணா” – மறுப்பு சொன்ன மாணவி! தற்கொலை செய்த லாரி கிளீனர்!

கர்நாடக மாநிலத்தில் உள்ள குடிபண்டே பகுதியை சேர்ந்தவர் மனோகர். லாரியில் கிளீனராக வேலை பார்த்து வரும் இவர், 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

ஆனால், அந்த மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். “நான் பத்தாம் வகுப்பு தான் படிக்கிறேன்.. என்னால் உங்களை திருமணம் செய்துக் கொள்ள முடியாது.. நான் படிக்க வேண்டும்..” என்று தன் நிலையை மனோகருக்கு புரிய வைக்க முயற்சி செய்துள்ளார்.

இதனை காதில் வாங்காத அவர், தொடர்ந்து அந்த பெண்ணை டார்ச்சர் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் தனது காதல் கைகூடாது என்பதை அறிந்த மனோகர், தான் வேலை பார்த்து வந்த லாரி வேகமாக போய்க்கொண்டிருந்த போது கீழே விழுத்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். இருமனமும் ஒன்றாக இணைந்து அன்பு கொள்வது தான் காதல். ஒருவரை கட்டாயப்படுத்தி காதலிக்க வைக்க முடியாது. இந்த எதார்த்தம் புரியாமல், இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News