Connect with us

Raj News Tamil

முதல்வர் குறித்து அவதூறு பதிவு – பாஜக நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்

அரசியல்

முதல்வர் குறித்து அவதூறு பதிவு – பாஜக நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்

தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாக கருத்துக்கள் வெளியிட்டதாக பாஜக ஐடி விங்க் நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் குறித்து அவதூறு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

இது குறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் அந்தோணி ராஜ் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாஜக நிர்வாகி செல்வபாலன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top