தவெக மாநாடு: கட்டுக்கு அடங்காத கூட்டம்; முன்கூட்டியே தொடங்க திட்டம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் ‘வெற்றிக் கொள்கைத் திருவிழா’ என்ற பெயரில் இன்று (அக். 27) மாலை 4 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

மாநாடு மாலையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிகாலை முதலே தவெக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

மாநாடு மாலை நடைபெறும் நிலையில், மதியம் 12.00 மணிகே 90 சதவீதம் இருக்கைகளும் நிரம்பினர். மேலும், மாநாடுக்கு தொடர்ந்து தொண்டர்கள் வருகை அதிகரித்து கொண்டே இருக்கின்றது.

இந்நிலையில், மாலை 4 தொடங்க இருந்த மாநாடு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக 3 மணிக்கே தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

RELATED ARTICLES

Recent News