தவெக மாநாடு: தொண்டர்கள் ஆரவாரத்துடன் கட்சிக் கொடியை ஏற்றி; கொள்கை பாடல் வெளியீடு!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் – விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் இன்று (அக்.27) பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது.

மாநாடு தொடங்கியதும் அரங்கில் தவெக கட்சியின் கொடிப் பாடல் இசைக்கப்பட்டது. பின்னர் சரியாக 4 மணியளவில் விஜய் மாநாட்டு மேடைக்கு வருகை தந்தார். மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை பார்த்ததும் நெகிழ்ச்சி அடைந்த விஜய் கண்கலங்கினார்.

தொண்டர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் இருகரம் கூப்பி வணக்கம் செலுத்தினார். தொண்டர்களுக்கு நடுவே ரேம்ப் வாக் சென்றார் விஜய். அப்போது தொண்டர்கள் வீசிய கொடியை அணிந்துக்கொண்டு தொண்டர்கள் முன் சென்றார்.

பின்னர் சுதந்திர போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேடையில் இருந்தவாறே பட்டனை அழுத்தி கட்சி கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து தவெக கொடிப் பாடல் இசைக்கப்பட்டது.

அதன் பின்னர் கட்சி நிர்வாகிகள் மாநாட்டில் ஒவ்வொருவராக மேடையில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தனர். தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதன் பின்னர் உறுதிமொழி வாசிக்கப்பட தவெக தொண்டர்கள் உறுதிமொழியேற்றனர். தொடர்ந்து பொதுச் செயலாளர் ஆனந்த் உரையாற்றினார். அதனையடுத்து கட்சியின் கொள்கைப் பாடல் வெளியிடப்பட்டது.

RELATED ARTICLES

Recent News