தவெக மாநாடு : “மது அருந்திவிட்டு வரக் கூடாது”- தொண்டர்களுக்கு தலைமை உத்தரவு

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட வி. சாலையில் நடைபெறவுள்ளது. இதற்காக 280 ஏக்கர் பரப்பளவில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மாநாட்டுக்கு வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும். மாநாடுக்கு மக்களை அழைத்து வரும் எந்த ஒரு வாகனத்தையும் டாஸ்மாக் அருகே நிறுத்த கூடாது என்றும் மது அருந்திவிட்டு வரும் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாரும் மது அருந்த கூடாது என மீண்டும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இது மட்டும் இல்லாமல் மாநாடு திடலுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கட்சியின் தன்னார்வலர்களை நிறுத்தி கண்காணிக்கவும் கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.

RELATED ARTICLES

Recent News