தமிழகம்
கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேர் கைது: 13 கிலோ கஞ்சா பறிமுதல்!
கிருஷ்ணகிரியில் இருந்து கடத்தி வந்து கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாநகர பகுதிகளில் கஞ்சா விற்பனை தடுக்க தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி சேலம் தாதகாப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து சேலம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் வாகன தணிக்கை ஈடுபட்டனர்.
அப்பொழுது சந்தேகத்திற்கு இடம் அளிக்க வகையில் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதிலிருந்த இருந்த பையில் 13 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இரண்டு சக்கர வாகனத்தில் வந்த சேலம் களரம்பட்டியை சேர்ந்த சண்முகம் என்கிற கேரளா சண்முகம் மற்றும் தாதகாப்பட்டி பகுதி சேர்ந்த பூபதி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
காவல்துறை விசாரணையில் கிருஷ்ணகிரியில் இருந்து ரகசியமாக கஞ்சா கடத்தி வந்து சேலத்தில் விற்பனை செய்வது தெரிய வந்தது.
மேலும், அவர்களிடம் இருந்து இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இதில் வேறு யாருக்கு தொடர்புள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)