Connect with us

Raj News Tamil

திமுக கட்சி பேனர் சாய்ந்து விழுந்ததில் இரண்டு பேர் காயம்…போலீசார் விசாரணை

தமிழகம்

திமுக கட்சி பேனர் சாய்ந்து விழுந்ததில் இரண்டு பேர் காயம்…போலீசார் விசாரணை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் பேருந்து நிலையம் எதிர்ப்புறம், தேவர் சிலை பிரிவு , எம்ஜிஆர் சிலை அருகே வைகை சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரமாக கட்சி பேனர்கள், திருமண நிகழ்ச்சிகளுக்கான பேனர்கள் அடிக்கடி வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் ஆண்டிபட்டி பேருந்து நிலையம் எதிரே திமுக கட்சியினர் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரின் ஒருபுறம் சரிந்து இருசக்கர வாகனத்தின் மீது விழுந்ததில் இரண்டு முதியவர்கள் காயம் அடைந்தனர்.

காற்று அதிகமாக வீசக்கூடிய இது போன்ற நேரங்களில் உரிய அனுமதி பெறாமல் இது போன்ற பேனர்கள் வைப்பது தடுக்கப்பட வேண்டும் என்று காயம் அடைந்த நபர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top