உஷார் நிலையில் இரு மாநிலங்கள்: தீவிர புயலாக வலுப்பெற்றது ‘டானா’ புயல்!

மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் (அக்.22) நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது.

இது மேலும் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று (அக்.23) அதிகாலையில் டானா புயலாக மாறியது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்றிரவு தீவிரப் புயலாக வலுப்பெற்றது. இதன் காற்றின் வேகம் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்திலும் வீசுக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீவிர புயலானது வடக்கு ஒடிசா-மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி -சாகர் தீவுகளுக்கு இடையே இன்று (அக்.24) இரவோ அல்லது நாளை (அக்.25) காலையோ கரையை கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.

இதற்கிடையே டானா புயல் ஒடிசா-மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் முன்னெச்சரிச்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

RELATED ARTICLES

Recent News