வடிவேலுக்காக ட்வீட் போட்ட உதயநிதி ! இது தான் காரணமா ?

தமிழ் திரையுலகில் மாபெரும் காமெடி கதாநாயகனாக வலம் வந்து இன்றளவும் தனக்கென தனி அடையாளம் கொண்டவா் வைகைப்புயல்
வடிவேலு. இன்றும் பல்வேறு படங்களில் நடிக்க கமிட்ஆகியுள்ள இவா் , தற்போது முதலமைச்சாின் நிவாரண நிதிக்கு 6 லட்சம் மதிப்பிலான காசோலயை அமைச்சா் உதயநிதியிடம் வழங்கியுள்ளாா்.

இதனை உதயநிதி தனது எக்ஸ் வலைதளத்தில் ஷோ் செய்துள்ளாா் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, மிச்சாங் புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க, கழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்த சூழலில், அரசின் மீட்பு – நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில், ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு திரைக்கலைஞர் அண்ணன் வடிவேலு அவர்கள் ரூ.6 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.இப்பதிவிற்கு பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News