Connect with us

Raj News Tamil

லியோவிற்கு வேட்டு வைக்கும் உதயநிதி..!

சினிமா

லியோவிற்கு வேட்டு வைக்கும் உதயநிதி..!

லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி வந்த சவுக்கு சங்கர் 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். இதன் பிறகே, தமிழகத்தை சேர்ந்த பல பிரபலங்களை விமர்சித்து தனது கருத்துகளை சமூக வலைதளத்தில் கூற தொடங்கினார்.

இந்நிலையில், அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறவிருக்கும் லியோ படத்தின் இசைவெளியீட்டு விழாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகததற்கு உதயநிதி தான் காரணம் என்று சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.

அதாவது சென்னை, செங்கல்பட்டு, வட மற்றும் தென் ஆற்காடு ஆகிய பகுதிகளின் லியோ வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனதிற்கு வழங்கினால் தான் லியோ இசைவெளியீட்டு விழாவை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்த அனுமதி வழங்கப்படும் என்று உதயநிதி தரப்பு படக்குழுவிற்கு அழுத்தம் தருவதாக தெரிவித்திருந்தார்.

‘இது உண்மை இல்லை’ என்று லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ, தெரிவித்துள்ளது.

More in சினிமா

To Top