தமிழகம்
அவமானம் தாங்காமல் தந்தை தூக்கிட்டு தற்கொலை..!
கோவை மாவட்டம் காந்திபுரம் 100 அடி ரோட்டில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த மாதம் 28-ந் தேதி அதிகாலை 2 மணியளவில் 480 பவுன் மதிப்பிலான தங்கம், வைரம், பிளாட்டின நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதையடுத்து, 5 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு கொள்ளையன் விஜயை தேடி வருகின்றனர்.
விஜயின் மனைவி மற்றும் மாமியார்மிடமிருந்து 455 பவுன் நகைகள் மீட்கப்பட்டு அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மீதம் 25 பவுன் நகைகள் மட்டுமே மீட்க வேண்டியுள்ளது. இதனிடையே தர்மபுரியில் வசித்துவரும் விஜயின் தந்தை முனிரத்தினத்திடம் நேற்று தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்கு பின்னர் வீடு திரும்பிய முனிரத்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிதோனைக்கு அனுப்பிவைத்தனர்.