Connect with us

Raj News Tamil

வெள்ள பாதிப்புகளை பார்வையிடும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்..!

தமிழகம்

வெள்ள பாதிப்புகளை பார்வையிடும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்..!

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சென்னை வருகிறார். மழை வெள்ள பாதிப்புகளை அவர் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்ய உள்ளார்.

இவருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோரும் ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்வுக்கு பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் புயல் பாதிப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.

More in தமிழகம்

To Top