Connect with us

Raj News Tamil

“நிறைய குழந்தைகள் இருக்கு” – புலம்பிய தந்தை.. தங்கைகளை கொன்ற அக்கா! அதிர்ச்சி சம்பவம்!

இந்தியா

“நிறைய குழந்தைகள் இருக்கு” – புலம்பிய தந்தை.. தங்கைகளை கொன்ற அக்கா! அதிர்ச்சி சம்பவம்!

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் உள்ள கௌஹவர் ஜெய்த் கிராமத்தை சேர்ந்தவர் சவிதா. இவருக்கும், புக்ராஜ் என்பவருக்கும் இடையே முதல் திருமணம் நடந்த நிலையில், 13 மற்றும் 9 வயதில், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

ஆனால், இவர் தற்போது, தனது இரண்டாவது கணவன் சஹ்தேவ் உடன் வசித்து வருகிறார். முதல் கணவனின் குழந்தைகளோடு சேர்த்து, சவிதா, சஹ்தேவ் மற்றும் அவருக்கு பிறந்த 3 குழந்தைகள் என மொத்தமாக 7 பேர் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இதன்காரணமாக, குடும்ப பாரம் தாங்க முடியாமல், சஹ்தேவ் புலம்பியுள்ளார். இதனைக் கேட்ட 13 வயது நிரம்பிய மூத்த மகள், திடுக்கிடும் காரியத்தை செய்துள்ளார். அதாவது, கடந்த வியாழக்கிழமை இரவு, தனது சகோதரிகள் ரிது ( 7 ) மற்றும் பவித்ரா ( 5 ) ஆகிய இரண்டு பேரையும், கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார்.

தகவல் அறிந்து, இரவு 12.30 மணிக்கு, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இரண்டு சிறுமிகளின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத இரண்டு பேர், வீட்டிற்குள் நுழைந்து, தனது தங்கைகளை கொன்றதாக, 13 வயது சிறுமி கூறியுள்ளார். ஆனால், வீட்டின் கதவு எதுவும் உடைக்கப்படாததால், குடும்ப உறுப்பினர்களில் யாரோ ஒருவர் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர்.

அதன்பிறகு நடத்தப்பட்ட விசாரணையில், “குடும்ப பாரம் தாங்கவில்லை என்று தந்தை புலம்பினார். அதனால், சகோதரிகள் இரண்டு பேரை கொலை செய்தேன்” என்று 13 வயது சிறுமி ஒத்துக் கொண்டார். இதனைக் கேட்டு அதிர்ந்த காவல்துறையினர், அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

More in இந்தியா

To Top