காதலுக்காக பாலினத்தையே மாற்றிய பெண்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி..!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி பகுதியை சேர்ந்தவர் சோனல். இவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவரது வீட்டிற்கு விருந்தினராக வந்த சனா என்ற பெண், வீட்டின் மேல் போர்ஷனில் குடியிருந்து வந்தார். இந்நிலையில், சோனலுக்கும், சனாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது.

இவர்களது காதலுக்கு சோனலின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேறிவிடலாம் என்று சனா கூறியுள்ளார். இதையடுத்து, சனாவும், சோனலும் வெளியே தனியாக வீடு எடுத்து தங்கி வந்தனர். இருவரும், 3 ஆண்டுகள் ஒன்றாக வசித்து வந்த நிலையில், முழுமையான ஆணாக மாறுவதற்கு சனா முயற்சி செய்துள்ளர்.

மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ததில், ஆணாக மாறும் அறுவை சிகிச்சைக்கு சனா தகுதியுடையவர் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, கடந்த 2020-ஆம் ஆண்டு, ஜூன் 22-ஆம் தேதி அன்று அறுசை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

அந்த சிகிச்சையின்போது, அவரது மனைவி நான் தான் என்று சோனலும் கையெழுத்தெல்லாம் போட்டுள்ளார். முழுமையாக ஆணாக மாறிய பின், தனது பெயரை சோகைல் கான் என்று சனா மாற்றிக் கொண்டுள்ளார். இவ்வாறு இருக்க, சனா அரசு வேலை செய்து வருவதால், தனக்கும் அரசு வேலை வேண்டும் என்று சோனல் கேட்டுள்ளார்.

இதற்கு ஏற்பாடு செய்த பின், அரசு மருத்துவமனை ஒன்றில் சோனல் வேலை செய்து வந்தார். இதற்கு பிறகு தான், சோனலின் உண்மையான முகம் சனாவிற்கு தெரியவந்துள்ளது. அதாவது, சோனல் தொடர்ந்து சண்டை போடுவதும், வீட்டிற்கே வராமலும் இருந்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் தான் புறக்கணிக்கப்படுகிறோம் என்பதை சனா அறிந்துள்ளார்.

இந்நிலையில், சோனலுக்கும், மருத்துவமனையில் அவருடன் பணிபுரியும் கியான் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் தெரிந்துவிட்டதால், சனாவிடம் இருந்து பிரிந்து சென்ற சோனல், தனது பெற்றோருடன் இணைந்துவிட்டார். தற்போது, சோனலின் பெற்றோர், தனது மகளை சனா பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் அழைத்து விசாரணை நடத்தியதில், தனக்கு நடந்த சோதனைகளை சனா கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News