Connect with us

Raj News Tamil

புதுக்கோட்டையில் வேரோடு சாய்ந்த மரங்கள்..!!!

தமிழகம்

புதுக்கோட்டையில் வேரோடு சாய்ந்த மரங்கள்..!!!

புதுக்கோட்டையில் நேற்று இரவு காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் மீது மரங்கள் வேரோடு சாய்ந்தன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், நேற்று மாலை 3 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையினால் புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையில் மரங்கள் வேரோடு சரிந்து விழுந்ததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர்.

மேலும் மின்கம்பங்கள் மீதும் மரங்கள் சாய்ந்ததால் இரவு முழுவதும் பல மணிநேரம் மின்சாரம் இல்லாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர் தகவலின்பேரில் வந்த தீயணைப்புத் துறையினர் சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் சாலைகளில் விழுந்த மரங்களால் புதுக்கோட்டை பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More in தமிழகம்

To Top