உத்தரகாண்ட் மாநிலத்தில் சிவில் விமானப் போக்குவரத்து துறையை சேர்ந்த சில அதிகாரிகள், தங்கள் நிறுவன ஹெலிகாப்டர் மூலமாக கேதார்நாத் சென்றனர்.

கேதார்நாத் சென்ற உடன் ஜிதேந்திர குமார் சைனி என்ற அதிகாரி ஹெலிகாப்டர் முன் நின்று செல்பி புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார். ஹெலிகாப்டரின் கூர்மையான் இறக்கைகள் முழுவதுமாக நிற்பதற்குள் செல்பி எடுக்க முயன்றதால் அவருடைய தலை துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.