Connect with us

Raj News Tamil

தற்கொலைக்கு முயன்ற பெண்.. சிறைக்கு போன ஆபாச பெண் யூடியூபர்..!!

தமிழகம்

தற்கொலைக்கு முயன்ற பெண்.. சிறைக்கு போன ஆபாச பெண் யூடியூபர்..!!

‘வீரா டால்க்ஸ் டபுள் எக்ஸ்’ என்ற யூடியூப் சேனல் சார்பாக அதன் தொகுப்பாளினி சுவேதா என்பவர் ஆபாச உடை அணிந்து கொண்டு இளைஞர்களிடம் டபுள் மீனிங் கேள்வி கேட்பதுதான் இந்த சேனலின் நோக்கம்.

இந்நிலையில் சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள வி.ஆர் மால் பகுதியில் மாலுக்கு வருவோர் போவோரிடம் காதல் குறித்து கருத்து கேட்டுள்ளார். அப்பொழுது இளம்பெண் ஒருவரிடம் காதல் குறித்து கேட்டுள்ளனர். ‘ஒளிபரப்பு செய்ய மாட்டோம் சும்மா ஜாலியா சொல்லுங்க’ என கேட்டுள்ளனர். அப்பெண்ணும் தன்னுடைய காதல் வாழ்க்கை குறித்து தெரிவித்த கையேடு இதனை வெளியிட வேண்டாம் என நிபந்தனை விதித்துள்ளார். யூடியூப் சேனல் தரப்பும் வெளியிட மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அந்த பேட்டியை யூட்யூப் நிர்வாகத்தினர் வெளியிட்டிருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.

இது குறித்து கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த சேனலில் வெளியான அந்த பேட்டி நீக்கப்பட்டது. இருப்பினும் பேட்டியை எடுத்த சுவேதா என்ற பெண் மற்றும் ஒளிப்பதிவாளர் யோகராஜ், அந்த சேனலின் உரிமையாளர் ராம் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப்போது கைது செய்யப்பட்டுள்ள யூடியூப் சேனலின் 3 ஊழியர்களும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top