Connect with us

Raj News Tamil

“ஆளுநர் ஒரு சங்கி” – வெளுத்து வாங்கிய வேல்முருகன்!

தமிழகம்

“ஆளுநர் ஒரு சங்கி” – வெளுத்து வாங்கிய வேல்முருகன்!

மாநில அரசின் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு ஆட்டம் போட நினைத்தால், வரும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவிற்கு தக்க மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், சங்கிகளின் கூட்டத்தில் இருந்து வந்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக பல வேலைகளை செய்து வருவதாக விமர்சித்தார்.

மேலும், தமிழக மக்கள் இதனை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும், இதற்கு எதிர்வினை ஆற்றுவார்கள் என்றும், எச்சரித்தார்.

தொடர்ந்து பேசிய வேல்முருகன், மீனவர்களுக்காக பிரத்யேக அமைச்சகத்தை உருவாக்குவோம் என்று சொன்ன பாஜக, தற்போது கள்ள மௌனம் சாதிக்கிறது என்று தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதற்கு, அண்ணாமலையின் பதில் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top