வெங்கட் பிரபுவின் அடுத்த ஹீரோ இவரா?

விஜய் நடிப்பில் உருவான தி கோட் என்ற படத்தை, வெங்கட் பிரபு கடைசியாக இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக நல்ல லாபத்தை பெற்று இருந்தது.

இந்த படத்திற்கு பிறகு, சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து புதிய படம் ஒன்றை அவர் இயக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், எஸ்.கே தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் கமிட் ஆகி இருப்பதால், வெங்கட் பிரபுவுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் என்று சிலர் கூறி வந்தனர்.

இந்நிலையில், வெங்கட் பிரபு அடுத்து யாரை வைத்து படம் இயக்க உள்ளார் என்ற அதிரடி தகவல் கிடைத்துள்ளது. அதாவது, நடிகர் ரஜினியை வைத்து, லைக்கா நிறுவனம் மீண்டும் ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாம்.

இந்த படத்தை, வெங்கட் பிரபு இயக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த தகவல், பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜயை வைத்து படம் இயக்கும் இயக்குநர்கள், அடுத்ததாக, நடிகர் ரஜினியின் படத்தை இயக்க தொடர்ச்சியாக ஒப்பந்தமாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News