Connect with us

Raj News Tamil

டிரம்புக்கு எதிராக தீர்ப்பு : தீா்ப்பளித்த நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்..!

உலகம்

டிரம்புக்கு எதிராக தீர்ப்பு : தீா்ப்பளித்த நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்..!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக ,பாராளுமன்ற வன்முறை வழக்கில் கொலராடோ மாகாண நீதிமன்றம் அவர் அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என்று கூறியது. மேலும் கொலராடோ மாகாணத்தில் அவருடைய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் டிரம்ப் பெயர் இடம்பெறாது,அப்படி இடம் பெற்றிருந்தால் வாக்குகள் எண்ணப்படாது என்று தீா்ப்பளித்தது. இந்த நிலையில் டிரம்புக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு தொடா்ந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நீதிபதிகள் வீடுகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் வீடுகளை சுற்றி கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து , போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் தனிப்பட்ட பாதுகாப்பை கருத்தில் கொண்டு விசாரணை குறித்த விளக்கத்தை யாரும் முழுவதும் வெளியிடவில்லை என்று தகவல் வெளிவந்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top