இந்தியா
உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் செங்குத்து துளை முயற்சி ! 31 மீட்டா் துளையிடப்பட்டுள்ளது என தகவல் !
உத்தராகண்டில் சில்க்யாரா – பர்கோட் இடையே அமைக்கப்படும் சுரங்கப் பாதையில் கடந்த 12-ம்தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில்,41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்பதற்காக, அமெரிக்க தயாரிப்பான ஆகர் இயந்திரம் துளையிடப்பட்டுது. ஆனால், அதன் பிளேடு, கம்பிகளில் சிக்கி சுரங்கப் பாதையில் சிக்கிக் கொண்டது. இதனால், அந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பக்கவாட்டில் துளையிடும் முயற்சி கைவிடப்பட்டது.
இதைத்தொடா்ந்து, சுரங்கத்தின் மேல் பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிட்டு, தொழிலாளர்களை மீட்க திட்டமிடப்பட்டது. செங்குத்தாக துளையிடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.மொத்தம் 100 மணி நேரத்தில் 81 மீட்டர் செங்குத்தாக துளையிட்டு தொழிலாளர்களை மீட்பதே திட்டம் என மீட்பு குழுவினா் தொிவித்தையடுத்து இதுவரை 31 மீட்டர் செங்குத்து துளையிடப்பட்டுள்ளதாக மீட்புக் குழு தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து சாலைப் போக்குவரத்து கூடுதல் செயலர் மகமுது அகமது நேற்று தொிவித்துள்ளதாவது”ஒவ்வொரு முறை துளையிடும்போதும் குறிப்பிட்ட இடைவெளியில் இயந்திரத்தின் ஊசி நுணியை மாற்ற வேண்டியுள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன” எனக் கூறியுள்ளாா்.இன்று நாளையும் பனி மழைக்கு வாய்ப்புள்ளதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்படும் நிலைவுள்ளதாக தொிகிறது.