விடாமுயற்சி குறித்து சூப்பர் அப்டேட்!

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு, அஜர்பைஜான் நாட்டில் நடந்து வந்தது. அப்போது, மனைவி ஷாலினிக்கு அறுவை சிகிச்சை நடந்ததால், அஜித், சென்னைக்கு திரும்பியிருந்தார்.

மீண்டும், வரும் 8-ஆம் தேதி அன்று, அஜர்பைஜான் நாட்டிற்கு செல்ல உள்ளாராம். அதுவரை, அஜித் இல்லாத காட்சிகளை, படக்குழுவினர் எடுத்து வருகின்றார்களாம்.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, விடாமுயற்சி படத்தின் சண்டைக் காட்சி ஒன்றை, அஜர்பைஜான் நாட்டில் படமாக்குவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டிருந்தார்களாம்.

ஆனால், அந்நாட்டில் அதிக செலவு ஏற்படுவதால், அந்த சண்டை காட்சியை, ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் எடுக்க, திட்டமிட்டுள்ளார்களாம். இதற்கான படப்பிடிப்பு, வரும் ஜூலை 28-ஆம் தேதி நடக்க உள்ளது.

இந்த சண்டைக் காட்சியோடு, படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிய உள்ளதாம். ஒருவழியாக, படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்க இருப்பதால், ரசிகர்கள் சற்று உற்சாகம் அடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News