சினிமா
விஜய் சேதுபதியால் தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்…காரணம் இதுதான்..
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவரின் படங்களுக்கு எப்பொழுதுமே ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் சம்பளத்தை அதிகமாக கேட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் தயாரிப்பாளர்களும் வேறு வழி இல்லாமல் ஓகே சொல்வதால் இவரது சம்பளம் தற்போது அதிகமாகி விட்டது.
சுந்தர் சி அரண்மனை 4 படத்தில் நடிப்பதற்கு அதிகமான சம்பளத்தை கேட்டிருக்கிறார். இதை கேட்ட தயாரிப்பாளர் இவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டார். தற்போது இவர் படத்திற்கான வியாபாரம் ரொம்ப மந்தமாகவே இருந்து வருகிறது.
விஜய் சேதுபதி நடித்து ஓடாத சங்கத்தமிழன் படத்தின் சேட்டிலைட் உரிமை 14 கோடிக்கு வாங்கப்பட்டது. இவர் நடித்த ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற திரைப்படத்தை 3 கோடிக்கு கூட வாங்க ஆள் இல்லாமல் இவர் நிலைமை இருக்கிறது.
இவர் நிலைமை இப்படியே போய்க் கொண்டிருந்தால் இவர் கூடிய சீக்கிரமே சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்படுவார் என கூறப்படுகிறது.
You must be logged in to post a comment Login