Connect with us

Raj News Tamil

முதல் அறிக்கைக்கே இந்த நிலையா? வாயை கொடுத்து புண்ணாக்கிக் கொண்ட விஜய்!

சினிமா

முதல் அறிக்கைக்கே இந்த நிலையா? வாயை கொடுத்து புண்ணாக்கிக் கொண்ட விஜய்!

தளபதி விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததில் இருந்து, எந்தவொரு விஷயத்திற்கும் குரல் கொடுக்காமல் இருக்கிறார் என்று, சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், சி.ஏ.ஏ திட்டத்திற்கு தனது எதிர்ப்புக் குரலை பதிவு செய்திருந்தார். மேலும், தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை அமல்படுத்தாமல் இருப்பதை, ஆட்சியாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இதனை பார்த்த திமுக ஆதரவாளர்கள், சி.ஏ.ஏ திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று ஏற்கனவே முதலமைச்சர் கூறிவிட்டார் என்றும், வெற்று விளம்பரத்திற்காக பேசாதீங்க என்றும், விமர்சித்தார்கள்.

இதுமட்டுமின்றி, பாஜகவை சேர்ந்த சுமந்த் ராமன் பதிவு வெளியிட்டிருந்தார். அதில், சி.ஏ.ஏ திட்டம் அமலாவதை, மாநில அரசு எப்படி தடுத்து நிறுத்த முடியும் என்றும், இதை யாராவது விஜயிடம் தயவு செய்து சொல்லுங்கள் என்றும் என்று கூறி, விமர்சித்திருந்தார்.

இவ்வாறு, திமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்களும், விஜயை விமர்சித்து வருகின்றனர்.

More in சினிமா

To Top